Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 2,067 பேர் பாதிப்பு

ஏப்ரல் 20, 2022 10:54

புதுடெல்லி: இந்தியாவில் நேற்று (ஏப்.,19) 1,247 ஆக இருந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு, கடந்த 24 மணிநேரத்தில் 2,067 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,067 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,47,594 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 1,547 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,25,13,248 ஆனது. தற்போது 12,340 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கோவிட் காரணமாக 40 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,22,006 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 186.90 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 17,23,733 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்